Thursday, February 8, 2024

ஷெனாய் ராம்


தன் இதயத்தில் துடித்த
ஈஸ்வர அல்லா தேரே நாமை
நாடெங்கும் நடந்து
காலால் மண்ணில்
எழுதிச் சென்றார்
அவர்
அதை
ஷெனாய் கொண்டு
மனதால் கிளறி
காற்றில் எழுதி வைத்தார்
இவர்
ராம் ராம் ராம் ராம்
ராஜாராம்
பிரித்திட முடியா
பிஸ்மில்லாஹ் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராஜாராம்
ஷெனாய் வனம் துயிலும்
சீதாராம்
-ஆசை

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கானின் ரகுபதி ராகவ ராஜாராமைக் கேட்க:


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 



3. TENET










 

No comments:

Post a Comment