Friday, April 25, 2025
ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தினர்கூட போர் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்!- ராணுவ வீரரின் மகனும் போர்ச் செய்தியாளருமான ஜி.கிருஷ்ணன் பேட்டி
உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…
Wednesday, April 23, 2025
50% சிறப்பு விலையில் என் நூல்களும் மகிழ் ஆதன் நூல்களும்!
அனைவருக்கும் உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்! இத்தருணத்தை முன்னிட்டு எனது கவிதைத் தொகுப்புகளும், குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதைத் தொகுப்புகளும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். (தனியாகவும் மொத்தமாகவும் உண்டு). இந்தச் சலுகை ஏப்ரல் 30 வரை மட்டுமே. இந்தத் திட்டத்துக்குப் பேராதரவு தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நண்பர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். விவரங்கள் மேலே உள்ள படத்தில்!
Sunday, April 20, 2025
புனித கல்லறையர் சொன்ன சுவிசேஷம்
Friday, April 18, 2025
புனித வெள்ளியின் உதிரத் துளி
Wednesday, April 16, 2025
மகிழ் ஆதன்-13: சிறப்புப் பகிர்வு
கவிஞரும் எங்கள் மகனுமான மகிழ் ஆதனுக்கு இன்று 13-ஆம் பிறந்த நாள். இன்று அவர் பதின்பருவத்தில் அடியெடுத்துவைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. மகிழ் ஆதனின் கவிதைகளுள் சிலவற்றை இங்கே படிக்கலாம்.
மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021) தொகுப்பிலிருந்து…
1.
பூக்கள் நம்மளை
வாசனை ஏத்த வைக்கும்
நம்மள்
புல்லாங்குழல் வைச்சு
வாசனை ஏத்த வைப்போம்
2.
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது
3.
கண்முத்தம்
பறவை முத்தம்
ஊதா முத்தம்
மனசு முத்தம்
ஏசப்பா முத்தம்
நீலப்பறவை முத்தம்
4.
நான் பறவை ஒளி
நீ பறவை கண்காட்சி
நான் முந்திரிக் கண்
நீ முத்தம் கண்
5.
சிறுத்தைக் கண்
என்மீது பாயும்போது
ஒரு நடு ஒளி வரும்
6.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி
7.
எரிகல்
வானத்தில் இருக்கும்போதே
வானத்தைக்
காதலிக்கும்
8.
மழைச் சொட்டுக்கள்
என் கண்ணில் விழுந்து
என் கண்
பழச்சொட்டுக்களாக மாறும்
9.
நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
-மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’
தொகுப்பிலிருந்து.
நூலைப் பெற: வானம் வெளியீடு – 91765 49991
**
மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்…
1.
காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்
2.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது
3. காலத்தின் சொல்
காலத்திற்கு வடிவம் இருக்கா
சொல்லுக்கு முடிவு இருக்கா
காலத்திற்கு இடம் உண்டா
சொல்லுக்கு வெளிச்சம் உண்டா
காலத்திற்கு வீடு இருக்கா
சொல்லுக்கு முத்தம் இருக்கா
காலத்திற்குக் கனவு இருக்கா
சொல்லுக்கு உடம்பு இருக்கா
காலத்திற்கு உணர்வு இருக்கா
சொல்லால் வளர முடியுமா
சொல் என்றால் என்ன
அது ஒரு நிறம்
காலம் என்றால் என்ன
அது ஒரு புதிய மண்
4. புதிய காலம்
காலத்தின் அழகு
கண்ணால் மறைந்து
காதால் தெரியும்
நான் காலத்தின் மேல்
காலத்தின் வெளிச்சத்தை வரைந்தேன்
காலம் ஒரு கற்பனை
அந்தக் கற்பனையை
நான் உடைத்தேன்
காலத்துக்குள் ஒரு புதிய காலம்
பிறக்கிறது
5. பகலிரவு
பகல்
வண்ணங்களின் நிழலைக்
காட்டும்
இரவு
வண்ணங்களின்
கலைந்த கனவைக் காட்டும்
பகல்
ஒளியின் கோடு
இரவு
வண்ணங்களின் திட்டம்
பகல்
பார்வையின் ஒளி
இரவு
வெளிச்சத்தின் குளிர்
6. நமக்குள் கருந்துளை
கருந்துளை காலத்தை முழுங்கியது
நம்மள் கருந்துளைக்குள் இருக்கிறோம்
கருந்துளை ஒரு கருப்புபூதம்
கருந்துளை காந்தத்தின் கண்
காலத்தின் நிறம் கருப்பு
காலத்தின் நிறம்
கருந்துளையைக் கற்பனையில் உருவாக்கியது
கருந்துளை ஒரு கதையிலிருந்து வந்தது
நமக்குள் கருந்துளை
கருந்துளை
பூவுக்குள் தூங்கியது
காலமும் கருந்துளையும்
ஒரு பாட்டின் சந்தம்
கருந்துளை
சத்தத்தின் கனவு
7. எதிர்காலத்தில் வீசும் காற்று
பூக்கள்
பூக்களில் ஒட்டும் காலம்
காலம்
ஒளியைக் கூறிச் செல்லும் காலம்
பூக்களின் நிறம்
காலத்தின் மேல்
காலம்
ஒரு தட்டில் தெரியும் முகம்
கனவு
ஒரு எதிர்காலத்தில் வீசும் காற்று
காலம்
காற்றின் நிழல்
காலம்
கண்கட்டும் பூச்சாண்டி
காலத்துக்குள்
கரைந்த மேகம் இருக்கு
8. காலம் என்றால்
காலம் என்றால் மேகம்
ஒளி
மழை
கடல்
பறவை
சிங்கம்
சத்தம்
காற்று
புலி
ஆறு
சுனாமி
சூறாவளி
காட்டு யானை
நெருப்பு
குளிர்
மண்
வாசனை
விசில் குருவி
இறகு
கிளி
பச்சை
மான்
உலகம்
காலம் என்றால் கதை சொல்லும் பூ
- மகிழ் ஆதனின் ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’
தொகுப்பிலிருந்து.
நூலைப் பெற: எதிர் வெளியீடு – 99425 11302, 98650 05084
**
இன்னும் நூலாக்கம் பெறாத புதிய கவிதைகள்
1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்
2. விக்கலால் இறந்துபோன எலி
ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது
நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்
3. அதிசயங்கள்
இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்
அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே
4.
வானத்தின் ஜன்னல்
என் நினைவின் முயல்
5.
காட்டுக்கு அடங்கிய ஆடு
ஆட்டைப் பார்த்த பூக்கள்
மரத்திடம் என்ன சொன்னது
ஆட்டுக்கு வந்த பசிதான்
நம் எதிரி
ஆட்டின் மனசைப் பார்த்து ஓடிய புலி
காட்டுக்குள் ஆடிய ஒளி
காட்டின் சத்தம் பறவைகளின் இதயம்
காட்டுக்குள் நுழைந்த ஒளியின் பதில்
காடு காலத்தில் படுக்கும் பாய்
காட்டுக்கு வந்த தூக்கம்
உணர்வில்லாத மரம்
6.
‘பூவுக்குள் இருக்கும் தேன்
யாருக்காக ஒளிந்திரிக்கிது
பறவைகளின் குரல் தேனின் காதில்
புல்லாங்குழல் வாசித்தது
தேனின் நிறம் ஆசையின் புதையல்
தேனிடம் மாட்டிய சத்தங்களை
பூமியில் புதைத்தது
பூமியில் இருந்து சத்தத்தின் பூக்கள் பூக்கும்
அதில் இருந்த தேன்கள் சிரித்தன
பூவுக்குள் இருக்கும் தேன்
முத்தத்தின் இருள்
பூவின் மேல் படும் வெயில்
தேனுக்கான அலாரம்
**
மகிழ் ஆதன் உலகத்துக்கு நான் எழுதிய அறிமுகம்:
ஸ்பைடர்மேனால் வரையப்பட்டவன் – மகிழ் உலகத்துக்கு ஓர் அறிமுகம்
மகிழ் ஆதன் கவிதைகள் தொடர்பாக மேலும் விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்:
எஸ். ராமகிருஷ்ணன்:
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f
சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3
டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2
மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj
ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk
The New Indian Express: https://tinyurl.com/543wx4zj
இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts
குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh
தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki
Tuesday, April 15, 2025
முந்நூறு முறை சாம்பியன்
Monday, April 14, 2025
சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை
டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...
ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.
Friday, April 11, 2025
மேஸ்திரியால் அழைக்கப்பட்டவர்கள்
Wednesday, April 9, 2025
ஒளியே சொல்
-ஆசை, ‘கொண்டலாத்தி’ (2010) கவிதைத் தொகுப்பிலிருந்து...