Thursday, February 13, 2025
காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!
Thursday, February 6, 2025
பெண்குஞ்சு
ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி
Tuesday, February 4, 2025
சூரியன் எதைச் சுற்றுகிறது?
ஆசை
சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.
படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.
Monday, February 3, 2025
முதலறியான்
Saturday, February 1, 2025
கன்னடத்தில் என் கவிதை
எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.
Friday, January 31, 2025
கிழவன்
Monday, January 27, 2025
இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி
Tuesday, December 31, 2024
காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை
(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)
தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப் ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
Saturday, December 28, 2024
சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்
![]() |
படம்: கோபி |
சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள் இங்கே:
நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438
*நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)
விலை: ரூ.50
எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43
*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)
இந்த நூல்கள் க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்
இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!
Friday, December 27, 2024
சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்
சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.
எதிர் வெளியீடு அரங்கு எண் F-43
*மாயக்குடமுருட்டி
(காவியம்)
விலை: ரூ.350
*ஹே ராவண்!
(கவிதைகள்)
விலை ரூ.200
*உயரத்தில் ஒரு கழுவன்
(சிறுகதைத் தொகுப்பு)
விலை: ரூ.220
க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612
*கொண்டலாத்தி
(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)
விலை: ரூ.180
ருபாயியத் -ஒமர் கய்யாம்
(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)
விலை: ரூ.125
பறவைகள்: அறிமுகக் கையேடு
(ப.ஜெகநாதனுடன் இணைந்து)
அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்
(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)
விலை: ரூ.180
இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669
*என்றும் காந்தி
விலை: ரூ.280
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்: F-4, 75-76
அண்டங்காளி
(கவிதைகள்)
விலை: ரூ.100
குவாண்டம் செல்ஃபி
(கவிதைகள்)
விலை: ரூ.160
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
(கலை, இலக்கியக் கட்டுரைகள்)
விலை: ரூ.330
Tulika - 426
என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்
Friday, November 22, 2024
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடும் படைப்பாளி (பிறந்தநாள் மீள்பகிர்வு)
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.
பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.
Sunday, November 17, 2024
க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்: நினைவுநாள் பகிர்வு
ஆசை
தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் அதிகம் வெளியாகும் சூழல் அல்ல, புத்தகங்களுக்கு நம் வாழ்க்கையில் நாம் முக்கிய இடம் கொடுப்பதே புத்தகக் கலாச்சாரம். அப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லாமல் போனதன் விளைவுகளுள் ஒன்றுதான் தமிழில் எடிட்டர்களும் ‘கிட்டத்தட்ட’ இல்லாமல் போனது. அந்தக் குறையைப் போக்க வந்த முக்கியமான இருவர் – ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் (2020), நஞ்சுண்டன் (2019) – சமீப ஆண்டுகளில் காலமானது தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பு.
எடிட்டிங்கை க்ரியா ராமகிருஷ்ணன் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு ‘எடிட்டிங்’ என்பதைப் பற்றித் தமிழ்ச் சூழல் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
Tuesday, June 18, 2024
க்ரியா ராமகிருஷ்ணன் 80வது பிறந்த நாள்
Saturday, June 15, 2024
மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!
![]() |
முதலில் வெளியான போஸ்டர் |
எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன்.
எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!
‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:
https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links
Sunday, May 5, 2024
21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்? - மார்க்ஸ் பிறந்த நாள் பகிர்வு
யானிஸ் வரூஃபக்கீஸ்
(தமிழில்: ஆசை)
ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும்.
Friday, April 26, 2024
ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?
Monday, April 22, 2024
புத்தக வாரத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பு!
புத்தக வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு அறிவிப்பு. என் கவிதை நூல்களும் குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதை நூல்களும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். இச்சலுகை இன்று தொடங்கி ஏப்ரல் 30 வரை. அனைவரும் வழக்கம்போல் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவரங்கள் இப்பதிவில் உள்ள படத்தில்.
Tuesday, April 16, 2024
மகிழ் ஆதன் 12வது பிறந்த நாள்!
மகனும் கவிஞனுமாகிய மகிழ் ஆதனுக்கு இன்று 12வது பிறந்த நாள். மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதற்கு முன் சில குறிப்புகள்.
பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். நான் கவிஞனாக இருப்பதுதான் அவன் கவிதை எழுதுவதற்குக் காரணம் என்று கூறினால் அது அவனது இயல்பான மேதமையைச் சிறுமைப்படுத்துவதாகும் என்றே கருதுகிறேன்.
மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது.
Friday, March 29, 2024
திருவயிற்றின் கனி - புனித வெள்ளி சிறப்புக் கவிதைகள்
1. புனித வெள்ளியின் உதிரத் துளி
இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்
அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை
களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்
கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
Wednesday, March 27, 2024
ஒரு ஓட்டு சுந்தரேசன் - சிறுகதை
ஆசை
'நான் இந்த எலக்ஷன்ல நிக்கப்போறன் மாப்புள்ள' என்று குண்டைத் தூக்கிப்போட்டார் சுந்தரேசன் மாமா.
'நெசமாத்தான் சொல்றீங்களா மாமா, இல்ல ஒங்களுக்குக் கிறுக்கு எதுவும் புடிச்சிப்போச்சா?'
'நெசமாத்தான் சொல்றன் மாப்புள்ள. இந்தத் தேர்தல்ல நான் நிக்கப்போறன், சுயேச்சை வேட்பாளரா' என்றார் மாமா.
'அத்தைக்குத் தெரிஞ்சிச்சுன்னா ஒங்கள வுட்டுட்டுத் தேடாதே மாமா. அத வுடுங்க அய்யாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா என்னல்ல ஒதைக்கப் போறாரு'
'மாப்புள்ள, நான் ஒரு சுதந்திர ஜீவி ஒன் அத்தயால எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்ன ஒன் அய்யாவா' என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா'என்று சிரித்துவிட்டுப் பின் தொடர்ந்தார்