Showing posts with label சர்ச்சைகள். Show all posts
Showing posts with label சர்ச்சைகள். Show all posts

Wednesday, March 19, 2025

மொழிப் பிரச்சினை – ஒரு பார்வை



ஆசை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட தமிழகமே இந்திய அளவில் தனித்து நிற்கிறது. இதுவரை நடந்தவை ஆறு போராட்டங்கள். நடந்த ஆண்டுகள்: 1938, 1948, 1950, 1965, 1968, 1968. இவற்றில் மிகவும் உக்கிரமாகப் போராட்டங்கள் நடந்த ஆண்டுகள் 1938-ம் 1965-ம். நடராசன், தாளமுத்து என்ற இருவர் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது சிறைசென்றார்கள். 73 பெண்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடன் சிறைக்குச் சென்ற 32 கைக்குழந்தைகளும் உண்டு. 1965 போராட்டத்தின்போது சின்னசாமி என்ற இளைஞர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து இறந்தார். அந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 70. எனினும் 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மொழிப்போர் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.   

போராட்டங்கள் ஏன்?

Friday, April 26, 2024

ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?



நான் இளையராஜா ரசிகனாக (வெறியனாக) மட்டும் இருந்தபோது உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர் அவர் மட்டுமே என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் இருந்தேன். (வேறு யாரையும் கேட்டதில்லை). அந்த எண்ணத்தில் எனக்குள் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டது என் 19 வயதில்.
அப்போது மன்னார்குடி கல்லூரியில் இரண்டு நாள் ரோட்டரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. வீடு மன்னார்குடி என்றாலும் அங்கேயேதான் இரண்டு நாள் இருக்க வேண்டும். அந்த நிகழ்வில் விக்டர் என்ற மூத்த ரொட்டேரியன் தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Saturday, March 23, 2024

ஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்! - மேல்தட்டினரின் திணிப்பா?


கர்னாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சில நாட்களாக சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. கர்னாடக சங்கீத உலகின் வலதுசாரிகள் பெரும்பாலானோர் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதற்கு, கிருஷ்ணா பெரியாரைப் பற்றிப் பாடியது உட்பட பல குற்றச்சாட்டுகளைக் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்னொரு தரப்பும் டி.எம். கிருஷ்ணாவுக்கு அவர் ஒரு போலி முற்போக்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் டி.எம். கிருஷ்ணா முன்னெடுத்த ‘ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா’வில் என்ன நடக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிகழ்வைப் பார்த்த அனுபவத்தை எழுதினேன். அதன் மீள்பகிர்வு இங்கே: 

ஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்? 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம்.

Tuesday, March 5, 2024

மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியில் என்ன நடக்கிறது?

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பெரும் கனவுடன் ஆரம்பித்தது மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா (MCLI). இதற்காகவே நாராயண மூர்த்தியை மன்னித்துவிடலாம் என்று தோன்றும். அந்த வெளியீட்டின் புத்தகங்களையெல்லாம் இன்றுவரை கொத்துக்கொத்தாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது பெரும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மூர்த்தி லைப்ரரி எதிர்கொண்டிருக்கிறது என்பதை நேற்று அர்ச்சனா வெங்கடேசனின் பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

பதவிநீக்கம் செய்யப்பட்டோரின் அறிக்கை மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது


முன்பு இந்த லைப்ரரியின் முதன்மை ஆசிரியராக இருந்த ஷெல்டன் போலக் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். புதிய முதன்மை ஆசிரியராகப் பதவியேற்றிருக்கும் பேராசிரியர் பரிமள் பட்டீல் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்களுடன் எந்தத் தொடர்பிலும் இருப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது எந்தக் காரணமும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியின் ஏனைய எடிட்டர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

2016ல் நம் சக்கவர்த்தியின் படையினர் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கு எதிராகவும் அதன் அப்போதைய தலைவர் ஷெல்டன் போலக்குக்கும் எதிராகவும் போர்தொடுத்தபோது ஷெல்டன் போலக்குக்குத் துணைநின்ற ரோஹன் மூர்த்தியின் நிலைப்பாடு இப்போது என்ன என்பது தெரியவில்லை. தற்போது மூர்த்தி லைப்ரரிக்கு முதன்மை ஆசிரியராக ஒரு இந்தியர் ஆகியிருக்கிறார். அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. இனி இந்த லைப்ரரிக்கு என்னவாகும், பாதிவரை மொழிபெயர்த்த நூல்களுக்கு என்னவாகும் என்பதெல்லாமும் தெரியவில்லை.

2016ல் ஷெல்டன் போலக்குக்கும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கும் நம் சக்கரவர்த்தியின் அறிஞர்கள் நெருக்கடி கொடுத்தபோது இந்து தமிழ் நாளிதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அநேகமாக தமிழ் வெகுஜன ஊடகத்தில் அப்போது அந்த விவகாரம் குறித்து எழுதப்பட்ட ஒரே கட்டுரையாக இது இருக்கலாம். அதே போல் இந்த லைப்ரரி வெளியிட்ட முதல் தொகுப்புகளுக்கு இந்து நாளிதழில் 2015லேயே சுருக்கமான ஒரு அறிமுகம் எழுதினேன். தமிழில் வேறெந்த பெரும் பத்திரிகையிலோ சிறுபத்திரிகைகளிலோ எனக்குத் தெரிந்து இந்த நூல்களுக்கு விமர்சனங்கள் வெளியானதில்லை (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்). ஷெல்டன் போலக் விவகாரம் குறித்த என் கட்டுரையின் சுட்டியும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியான முதல் புத்தகங்கள் குறித்த என் அறிமுகமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.


Tuesday, February 27, 2024

இனிமேலும் இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தாதீர்கள்!


கடந்த ஆண்டு திருவாரூரிலோ தஞ்சையிலோ நடந்த இலக்கிய விழாவில் நண்பர் ஒருவர் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாட்ஸப் செய்தி அனுப்பினேன். அவருக்கு ஏதோ குறுகுறுத்திருக்கும் போலிருக்கிறது, ஏனெனில் அவர் எந்த மெசேஜும் எனக்கு அனுப்பாத, தொடர்பில் இல்லாத நிலையில் போய்விட்டவர், உடனே என்னை அழைத்து “ஆசை நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள்” என்றார். ஓஹோ முடிவெடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்து போனது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் வருந்தவில்லை.   நான் அதை மறந்துவிட்டேன்.

இந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா முடிந்தபோது என் ஊர்க்காரர்கள், நண்பர்கள் பலரும் வருத்தப்பட்டார்கள்.