Wednesday, August 9, 2023

காமம் கரைந்து - கவிதை



உன் காமம் 
முலைகளோடும் யோனியோடும்
பருத்த தொடைகளோடும்
திரண்ட தோள்களோடும்
திறந்த
ஆனால் பார்க்காத விழிகளோடும்
துடிக்கும்
ஆனால்
அசையாத வயிற்றோடும்
ஏன் சிலையாய்க்
கிடக்கிறது

அதை 
என் காமம்
படர்ந்து கழுவி விடும்போது
ஏன் கரைந்து
காணாமல் போய்
தெய்வமாகி விடுகிறது

அதுவரை கல்லாய்
ஏன் வேடிக்கை பார்த்தது
- ஆசை
  09-08-23

No comments:

Post a Comment