Monday, January 22, 2024

மராமரப் படலம்


வில்லடங்கா
புவிமீது
சொல்லடங்கா
சுடரழகன்
அம்பின் பாதையறிந்தான்

வீழ்ந்து கிடக்கும்
மராமரமேழும்
பராக்கிரம ஒற்றையம்பின்
விஸ்வரூபம்

தொடுத்த அம்பு
விடுத்த கணம்
ஏழேழாய் 
எல்லாமும் வீழ்த்தியது

வீழ்த்த ஏழு 
இனியேதுமில்லாத் திகைப்பில்
விடுத்த இடம் வந்தது
அடுத்தென்னவென்று
கேட்டது 

வில்லின் வேலை
அம்பு தொடுப்பது
அம்பின் வேலை
முன் துளைப்பது
வினா தொடுப்பதல்ல
என்று சுண்டிவிட்டான்
ஒற்றைவிரலால்

இவ்வுரையாடல்
தொடுத்தவனுக்கும்
தொடுத்ததற்கும் இடையேதான்

வீழ்ந்த மராமரங்களோ
விறகுக்கும் ஆகாது
பறவைக்கும்  ஆகாது
        - ஆசை


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்: 


No comments:

Post a Comment