Tuesday, February 17, 2015

அறிவோம் நம் மொழியை-2

ஆசை
எது கொள்ளை? எது திருட்டு?
இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை. பறிகொடுத்தது ஒரு பெரிய தொகை அல்லது கிலோ கணக்கில் நகைகள் என்றால் அது கொள்ளை என்றும் தொகையோ நகையோ குறைவாக இருந்தால் அது திருட்டு என்றும் நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது. உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் நுழைந்து கோடி ரூபாயை அடித்துச் சென்றாலும் அது திருட்டுதான். அதே சமயம், உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் எதிர்க்கும் பட்சத்தில் வன்முறைமூலம் ஒரு ரூபாயை அடித்துச் சென்றாலும் அது கொள்ளைதான். சாலையில் போகிறபோக்கில் உங்களிடம் அடித்துச் சென்றால் அது வழிப்பறி.
தொடர்பான சில சொற்கள்: களவு, ஜேப்படித் திருட்டு, ஜேப்படித் திருடன், அபகரித்தல், களவாணி, திருடன், திருடி, கொள்ளையர்.

                                  சாத்தனார், 17/09/2013 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது
                                             

No comments:

Post a Comment