Thursday, September 7, 2023

இருவேறு உலகத்து ஒரே மலர்





மலர்களுக்குக் கண்கள் உண்டு
அவை நம் கண்கள் இல்லை

மலர்களுக்குக் கண்ணீர் உண்டு
அவை நம் கண்ணீர் இல்லை

மலர்களுக்கு மனம் உண்டு
அது நம் மனம் இல்லை

மலர்களுக்கு வலி உண்டு
அது நம் வலி இல்லை

மலர்கள்
நமக்காக மலர்பவை இல்லை
ஆனால் நமக்காக
வைக்கப்படுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
இனி இந்த உலகத்தோடு
நாம் பேசுவதற்கான
நம் ஒரே வாயாக
ஆகிவிடுபவை

அப்படி நமக்கு வைக்கப்படும்போது
எல்லோரும் நம்மிடம் பேசுவதை
நாம் கேட்பதற்கான
ஒரே காதாகவும்
ஆகிவிடுபவை

நாம் இருக்கப் போகும் வெறுமைக்கும்
எங்கிருந்து அங்கு சென்றோமோ
அந்த வெறுமைக்கும் இடையே
அதன்பின்
ஒரே ஒரு மலர் மட்டுமே
இருக்கும்

இருவேறு உலகத்தின்
இயற்கைக்கும்
மணம் பரப்பியபடி
      - ஆசை

No comments:

Post a Comment