இன்று கஸ்தூர்பா காந்தியின் நினைவு நாள். எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை இத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Saturday, February 22, 2025
பாவென்று அழையுங்களேன் பாபுஜி! - கஸ்தூர்பா காந்தி நினைவுநாள் கவிதை
Friday, February 21, 2025
ஆக்டேவியோ பாஸ் கவிதைகள்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஆக்டேவியா பாஸின் ஆறு கவிதைகள்
1. விடியற்பொழுது
குளிர்ந்த விரைவான கரங்கள்
உருவிக்கொள்கின்றன
இருளின் கட்டுத்துணியை
ஒவ்வொன்றாக
நான் கண் திறந்து பார்க்கிறேன்
இப்போதும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் புதிதாக இருக்கும்
ஒரு காயத்தின் மத்தியில்
Thursday, February 20, 2025
மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை
இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:
Wednesday, February 19, 2025
Tuesday, February 18, 2025
பேஸிவ் ஸ்மோக்கிங் நாய்கள்
Monday, February 17, 2025
கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்
Saturday, February 15, 2025
இருவேறு உலகத்து ஒரே மலர்
Friday, February 14, 2025
Thursday, February 13, 2025
காதலர் தினத்தை முன்னிட்டுப் பாதி விலையில் எனது மூன்று கவிதை நூல்கள்!
Thursday, February 6, 2025
பெண்குஞ்சு
ஒன்றாய்க் குளித்துவிட்டு அம்மணங்குண்டியாக ஓடி வருகிறார்கள் அண்ணனும் தங்கையும் ‘அப்பா’ என்று கூவியபடி
Tuesday, February 4, 2025
சூரியன் எதைச் சுற்றுகிறது?
ஆசை
சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.
படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார்.
Monday, February 3, 2025
முதலறியான்
Saturday, February 1, 2025
கன்னடத்தில் என் கவிதை
எனது ‘ஹே... ராவண்!’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாவென்று அழையுங்களேன் பாபுஜி’ கவிதையை நண்பரும் எழுத்தாளருமான தூயனின் தந்தையும் தூயனின் மனைவி பவித்ராவும் இணைந்து கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் நன்றியும். கீழே தமிழ் மூலமும் கன்னட மொழிபெயர்ப்பும் கொடுத்திருக்கிறேன்.
Friday, January 31, 2025
கிழவன்
Monday, January 27, 2025
இந்தப் பிரபஞ்சத்தின் மையம் தேடி ஒரு வேள்வி
Tuesday, December 31, 2024
காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை
(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)
தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப் ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
Saturday, December 28, 2024
சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்
![]() |
| படம்: கோபி |
சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள் இங்கே:
நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438
*நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)
விலை: ரூ.50
எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43
*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)
இந்த நூல்கள் க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்
இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!
Friday, December 27, 2024
சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்
சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.
எதிர் வெளியீடு அரங்கு எண் F-43
*மாயக்குடமுருட்டி
(காவியம்)
விலை: ரூ.350
*ஹே ராவண்!
(கவிதைகள்)
விலை ரூ.200
*உயரத்தில் ஒரு கழுவன்
(சிறுகதைத் தொகுப்பு)
விலை: ரூ.220
க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612
*கொண்டலாத்தி
(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)
விலை: ரூ.180
ருபாயியத் -ஒமர் கய்யாம்
(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)
விலை: ரூ.125
பறவைகள்: அறிமுகக் கையேடு
(ப.ஜெகநாதனுடன் இணைந்து)
அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்
(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)
விலை: ரூ.180
இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669
*என்றும் காந்தி
விலை: ரூ.280
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்: F-4, 75-76
அண்டங்காளி
(கவிதைகள்)
விலை: ரூ.100
குவாண்டம் செல்ஃபி
(கவிதைகள்)
விலை: ரூ.160
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்
(கலை, இலக்கியக் கட்டுரைகள்)
விலை: ரூ.330
Tulika - 426
என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்






.jpg)











