சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கு மோசமான காலகட்டங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, நெருக்கடி நிலை காலகட்டம், இன்னொன்று தற்போதைய காலகட்டம். கடந்த 70 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் என்று எதுவுமே கருத்து சுதந்திரப் பரிசோதனையில் மிஞ்சாது. சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) நாவலை காங்கிரஸ் அரசு தடைசெய்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ அரசு ஆண்டபோது தஸ்லிமா நஸ்ரினின் நாவலைத் தடைசெய்தது. ‘தி டாவின்சி கோட்’ திரைப்படத்தை திமுக அரசு தடைசெய்தது. பாஜக கட்சியும் சரி அரசுகளும் சரி அந்தக் கட்சி சார்பான அமைப்புகளும்சரி பல்வேறு புத்தகங்களுக்கும் பல்வேறு கலைஞர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. எம்.எஃப். ஹுசைன், சிவாஜியைப் பற்றிய ஜேம்ஸ் லைனின் புத்தகம் தொடங்கி பெருமாள் முருகன் வரை ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.
Thursday, October 9, 2025
Sunday, October 5, 2025
காவிரி தந்த மல்லாரி வேந்தர்! - நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிக்கு அஞ்சலி!
பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (பிறப்பு: 14-04-1930) இன்று காலமானார். அவருக்கு வயது 95. அவரைப் பற்றி எனது ‘நீரோடிய காலம்’ தொடரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய அத்தியாயத்தை இங்கே பகிர்கிறேன்:
கொள்ளிடம் கடலுடன் கலக்கும் பழையாறில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதும் என் மனதில் ஓடிய ஊரின் பெயர் ‘ஆச்சாள்புரம்’தான்.
ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை சி.டி. வடிவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்க ஆரம்பித்தேன். மல்லாரி என்பது சுவாமி புறப்பாட்டின்போது நாதஸ்வரத்தின் வாசிக்கப்படும் ஒரு இசைவடிவம். எனக்கு ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை அறிமுகப்படுத்திய நண்பர் “பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை” என்று கூறியபோது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால், கம்பீர நாட்டையில் அமைந்த கம்பீரமான சின்னத்தம்பியின் மல்லாரிகளைக் கேட்டு முடித்தபோது நண்பரின் கூற்றில் எந்த மிகையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.
Thursday, October 2, 2025
காந்தி பிறந்தநாள் சிறப்புக் கவிதைகள்!
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ‘ஹே... ராவண்!’ (2025, எதிர் வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்: