Saturday, May 18, 2013

நான் 'ஆசை' ஆனது எப்படி?



சிறு வயதிலிருந்து எனக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது பெரிய கனவு. அதுவும் சத்யஜித் ரே, மகேந்திரன், பாலு மகேந்திரா மாதிரியான இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு இருந்தது கனவு மட்டும்தான் அந்தக் கனவைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய திறமையும் துணிச்சலும் எனக்கு இல்லை என்பதை க்ரியா ராமகிருஷ்ணன் எனக்குப் புரிய வைத்தார். அது மட்டுமல்லாமல் மொழியும் இலக்கியமும்தான் என்னுடைய உண்மையான தளம் என்பதைக் கண்டுபிடித்து அதில் செயல்படுவதற்கான ஊக்கமும் அளித்தார். என் வாழ்க்கை அங்கிருந்துதான் புதிய தடத்தில் செல்ல ஆரம்பித்தது.

புரட்சி அக்காவின் கதை


                                                    படம்: நன்றி: ஆதிமூலம் 

ஆசை  

நேத்து நடந்த நேர்காணலப் பத்தியா கேக்கற, அது பெரிய கூத்து மாமா. நான் சின்னப்புள்ளயா இருக்கறப்பலருந்தே வாத்தியாரோட ரசிகன். எனக்குப் பத்து வயசா இருந்தப்ப கணக்குக் கேட்டாருன்னு அவரக் கட்சிய உட்டுத் தூக்குனாங்க. வெவரம் புரியாத அந்த வயசிலேயே எங்கப்பாவோட சேர்ந்துகிட்டு 'குள்ளநரி குருசாமியே கணக்குக் காட்டு கணக்குக் காட்டு'ன்னு கோஷம் போட்டுட்டுப் போனேன். கட்சி உறுப்பினரா முப்பது வருஷத்துக்கு மேல இருக்கன் மாமா, நானும் எவ்வளவோ தலையாலத் தண்ணி குடுச்சுப் பாத்துட்டன், கட்சில நல்ல நல்ல பதவியல்லாம் நம்ம கைல மாட்டாம போயிட்டே இருக்கு.

ஜப்பானிய ஹைக்கூ


புத்தனிடமிருந்து திரும்பிக்கொள்கிறேன்  
எவ்வளவு குளுமை
நிலவொளி
 
                 -
 ஷிகி

நானும் என் கொண்டலாத்தியும்

 ஆசை
பறவைகள் மீதான எனது ஈடுபாடு சிறிது காலத்துக்கு முன்தான் ஆரம்பித்தது. இருபத்தைந்து வயது வரை எனது பிரக்ஞையில் பறவைகளுக்குப் பெரிய இடம் இருக்கவில்லை. எல்லாரையும் போலவே அப்போது எனக்கும் காகம், பருந்து, கிளி, மயில் போன்ற ஒரு சில பறவைகள் மட்டுமே தெரியும்; அவ்வளவுதான். என்னைப் பறவைகள் உலகத்தை நோக்கித் திருப்பியது என் நண்பரும் விரிவாக்கப்பட்ட 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யின் ஆசிரியருமான எஸ். ராமகிருஷ்ணன்தான். அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று என்னிடம் கேட்பார்: ''ஒரு குக்குறுவான் கத்துறது கேக்குதா?''. நான் காதை எவ்வளவோ கூர்தீட்டிக்கொண்டு கேட்டாலும் எனக்கு அந்தச் சத்தம் கேட்கவே கேட்காது; அப்புறம் அலுவலகத்தின் வாயில்புறத்திலுள்ள அடர்ந்த பூச்செடியைக் காட்டி ''அதோ ஒரு தேன்சிட்டு!'' என்பார்; நான் எவ்வளவோ தேடிப்பார்த்தும் அது எனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்துகொண்டேன். பறவைகளை அணுக பார்வையும் கேட்புத் திறனும் மட்டும் போதாது; நுண்ணுணர்வும் வேண்டும் என்று.

பறவைகளைப் பார்த்தல்: என் அனுபவங்கள்

                                                          படம்: கே. ஞானஸ்கந்தன்   

ஆசை
நான் ஒரு பறவையியலாளன் அல்ல; பறவைகளைப் பார்ப்பவன் அவ்வளவே.      மன்னார்குடியில் என்னுடைய வீட்டருகில் நீங்கள் பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால், விசேஷமாக ஏதும் செய்யத் தேவையில்லை. மொட்டை மாடியில் போய் நின்றுகொண்டால் ஒரு மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளைப் பார்க்கலாம். எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் பறவைகள்: காகம், மைனா, தேன்சிட்டு, தையல்சிட்டு, தவிட்டுக்குருவி (கல்லுக்குருவி என்றும் சொல்வார்கள்), கொண்டைக்குருவி, பருந்து, சோலைப்பாடி, வாலாட்டி, கொண்டலாத்தி, குக்குறுவான், மணிப்புறா, குயில், கரிச்சான், சிட்டுக்குருவி, மரங்கொத்தி போன்றவை. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் சிறகி, நீளவால் இலைக்கோழி, நீர்க்காகம்  போன்ற பறவைகளைப் பார்க்க முடியும். அப்படியே வயல்வெளி, புதர்களூடே நடந்துசென்றால் செம்பகம், பஞ்சுருட்டான், ஆள்காட்டி, கொக்கு, மடையான்  போன்ற எண்ணற்ற பறவைகளைக் காணலாம்.
    இப்படிப் பறவைகளைக் காண்பது எதற்காக என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் பறவைகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் நாட்களெல்லாம் எனது படைப்புத் திறன் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டதையும் அந்த நாட்களில் மனதில் இனிமையான உணர்ச்சி நிலவியதையும் என்னால் உணர முடிகிறது. பறவைகளைப் பார்ப்பவர்கள் பலரும் குறிப்பேடு வைத்துக் குறித்துக்கொள்வார்கள். நான் அப்படிச் செய்வதில்லை, எனது குறிப்பேடு மனதுதான், எனது குறிப்புகள் கவிதைகள்தான்.

ஆசையின் "கொண்டலாத்தி" எனும் பறவை



அனார்(பிப்ரவரி அம்ருதா இதழில் வெளிவந்த மதிப்புரை )

  
வாழ்வது என்பது வேறு.... 
கனவை வாழ்வது வேறு..... 
கனவை வாழ்வது எப்படி என்பதையெல்லாம் ஒரு கவிதை மனம் உணர்ந்துதான் இருக்கும். கனவை வாழும் தருணங்களை, அடைவதன் பாதையை, நான் கவிதை எழுதும் தருணங்களில் கண்டுகொண்டிருக்கிறேன். நண்பர் ஆசையின் கொண்டலாத்தி கவிதைத் தொகுப்பு, கனவை வாழ்வதற்கான மிக மென்மையான அழைப்புகளை விடுக்கிறது. நம்முடைய வெறும் வாழ்வில் உயிருடன் உணரத்தக்க கனவுகளாக சிறகுகளைச் சிலிர்த்தும், பறவைகளை உற்றுணர்ந்து, பார்த்து ஆசை வாழ்ந்த கனவை அவருடைய கவிதைகளில் எமக்களித்திருக்கிறார்.

பேயோன் 1000


ஆசை  
        20ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மொழியின் பெரும் கவிஞன் பெர்னாண்டோ பெஸ்ஸோவா வெவ்வேறு ஆளுமைகளைச் சிருஷ்டித்து அந்த ஆளுமைகளுக்கென்று கற்பனை வரலாறுகளையும் சிருஷ்டித்து அந்தந்தப் பெயரில் தனித்தனிப் பாணியில் கவிதைகளும் எழுதிக் குவித்தார். (இந்த விமர்சனத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும்).



சிறு கணங்களின் புத்தகம்


ஆசை
         எப்போதையும்விட அபாயகரமான காலகட்டத்தில் இன்றைய கவிதை நுழைந்திருக்கிறது. இன்றைய கவிஞனைக் காப்பாற்ற செய்யுள் இல்லை, சந்தம் இல்லை, இசை இல்லை, உவமை இல்லை, படிமம்கூட இல்லை, 'போல' கூட நீர்த்துப்போய்விட்டது. இவை எதுவும் இல்லாமல் கவிதை சொல்ல வேண்டிய சவால். அப்படியும் நல்ல கவிதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன; நல்ல தொகுப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணமாக தேவதச்சனின் கவிதைகளைக் கூறலாம். 

God on the Hill: Temple Poems from Tirupati

ஆசை


நமக்கு நமது சொத்தான சங்க இலக்கியம் தெரியாது, ஆழ்வார்கள் பாடல்கள் தெரியாது, கம்பராமாயணம் தெரியாது, இடைக்காலச் சிற்றிலக்கியங்கள் தெரியாது, சித்தர் பாடல்கள் தெரியாது. அப்படியே தாயுமானவர் பாடல்கள், வள்ளலார் பாடல்கள் என்று கொஞ்ச நாள் கழித்து பாரதியார் பாடல்களும் 'நமக்குத் தெரியாதவற்றின்' பட்டியலுடன் சேர்ந்துவிடும்.

தென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு

ஆசை 
மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்'  (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்கிவரும் மிக முக்கியமான அமைப்பு. சலீம் அலி உள்ளிட்ட மிக முக்கியமான இயற்கையியலாளர்கள் பணியாற்றிய அமைப்பு. 'பிஎன்ஹெச்எஸ்'ஐச் சேர்ந்த பல ஆய்வாளர்களும் வல்லுநர்களும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றைப் பற்றி ஆராய்வதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுபவர்கள். தங்கள் அனுபவத்தின் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர்கள் பல முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் எல்லாருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது சலீம் அலியின் 'The Book Of Indian Birds'. அந்த வரிசையில் ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப் ஆகியோரின் உருவாக்கத்தில் வெளியானதும் புகழ் வாய்ந்ததுமான 'South Indian Birds' என்ற புத்தகம் தற்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. 'தமிலிலும்' கோபிநாதன் மகேஷ்வரன் என்பவரால் 'மொலிபெயர்கபட்டு' தற்போது வெளியாகியிருக்கிறது.

பறவைக் கூட்டில் மொழியின் முதல் சொல்

தேன்மொழி



“ஒரு மொழியின் கடைசி மனிதன்
இறந்து போனான்
அந்த மொழியின் முதல் சொல்லைத்
தன் கூட்டில் அடைகாக்கிறது
ஒரு பறவை” (பக்கம்-6.)

    கொண்டலாத்தி தொகுப்பில் கவிஞர் ஆசை, பறவைக் கூட்டில் ஒளிந்திருக்கும், மனிதர்களுக்கான மொழிகளை, கவிதை வழியாக அறிமுகப் படுத்துகிறார்.

Thursday, May 16, 2013

வடுவூர்: பெருமைகளும் சிறுமைகளும்


வடுவூர் ஏரி

நான் பிறந்து வளர்ந்த ஊர் மன்னார்குடி என்றாலும் எனது சொந்த ஊர் மன்னார்குடியிலிருந்து 12 கி.மீ தூரத்திலிருக்கும் வடுவூர் புதுக்கோட்டைதான். வடுவூரைச் சுற்றி இருக்கும் புதுக்கோட்டை, தென்பாதி போன்ற ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு. சமீபத்தில் கூட விளையாட்டு கிராமம் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வடுவூரைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வடுவூரின் பெருமைகளைவிட அதன் சிறுமைகள் அதிகம் என்பதால் என் ஊரை நினைத்து என்னால் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியவில்லை.

உலகின் முதல் மொழி தமிழா?


உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான். ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம். உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர். கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

சென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II

ஆசை
    சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. து எதிர்பார்த்த ஒன்றுதான். சென்னை வாழ்க்கையைச் சற்று விரிவான தளத்திலிருந்து பார்க்க விரும்புகிறேன். சென்னை வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லச் சொன்னால் நான் சொல்வது இதுதான்: அசெளகர்யம்.

போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களின் புனைவுகள்

ஆசை  

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள் பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்  இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ்.

உமாசங்கருக்கு ஒரு கடிதம்


                                                          படம்: நன்றி: தி ஹிந்து  

ஆசை
      
மதிப்புக்கும் அன்புக்கும் உரிய திரு. உமாசங்கர் இ.ஆ.ப. அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் ஆசைத்தம்பி, சொந்த ஊர் மன்னார்குடி. உங்களை நான் இரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன்; நீங்கள் திருவாரூர் ஆட்சியராக இருந்தபோது 'கார்கில் நிவாரண நிதி' அளிப்பதற்காகக் கல்லூரி சார்பில் திருவாரூர் வந்தபோது ஒரு முறை; அதற்குப் பிறகு நான் படித்துக்கொண்டிருந்த மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரிக்கு நீங்கள் வந்தபோது  ஒரு முறை. அப்போதே நீங்கள் அதிரடியான நடவடிக்கைகளுக்காகப் பேசப்படுபவராக இருந்தீர்கள். ஆனால், நான் நம்பவில்லை.  நீங்கள் என்றில்லை, பொதுவாகவே நான் எந்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்புவதில்லை.

மென்மையின் பாடல்

ஆசை 

ரவிக்குமாரை அரசியல் மற்றும் இலக்கிய விமர்சகராக, சிந்தனையாளராக, அரசியல்வாதியாக அறிவோம். திடீரென்று பார்த்தால் அவர் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் ஏழெட்டு மாத இடைவெளியில் இரண்டு கவிதைத் தொகுப்புகள். அதைவிட ஆச்சர்யமூட்டுவது என்னவென்றால் இந்த இரண்டு தொகுப்புகளிலிருந்தும் நமக்குக் காணக் கிடைக்கும் ரவிக்குமார்!

Friday, May 10, 2013

'பறவைகள்: அறிமுகக் கையேடு' நூலைப் பற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் வந்த செய்தி


Field guide in Tamil to assist bird watchers



CHENNAI: Can you identify the birds that fly across your horizon every day? If you can't, here's a book for you. 'Paravaigal: Arimigakkaiyedu' (Birds: Introductory field guide) has photographs and brief accounts of 88 birds commonly found in Tamil Nadu. They are mostly seen in the plains and some in hilly and coastal regions.

சென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்-1


(தமிழ் இன்று என்ற இணைய இதழுக்காக 2010ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி)

ஆசை


2001இல் எல்லாரையும்போல எண்ணற்ற கனவுகளுடன் நான் சென்னை வந்தேன். சத்யஜித்ரே போன்று பெரிய இயக்குநர் ஆவது, பெரிய கவிஞனாக ஆவது, பெரிய நாவலாசிரியனாக ஆவது என்றெல்லாம். நிறைய உலகத் திரைப்படங்கள் பார்க்கலாம், நிறைய எழுத்தாளர்களைச் சந்திக்கலாம், நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று எவ்வளவோ ஆசைகள். நிறைய உலகத் திரைப்படங்கள் பார்த்தேன், ஆனால் இயக்குநராக ஆகவில்லை. எழுத்தாளர்களைச் சந்தித்தேன், நான் ஒன்றும் பெரிய எழுத்தாளனாக ஆகவில்லை, நிறைய கற்றுக்கொண்டேன், எல்லாம் உயிரற்ற அறிவு.

Wednesday, May 8, 2013

சென்னை: நடப்பவர்களுக்கல்ல!

                                           படம்: நன்றி: வேளச்சேரி பாலு 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. நானும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு நண்பரும் ஒரு நாள் இரவு 8 மணி வாக்கில் திருவான்மியூரில் உள்ள 'ஹாட் சிப்ஸ்' ஓட்டலுக்குச் சாப்பிடப் புறப்பட்டோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஜெயந்தி சிக்னலுக்கு அருகில் உள்ள மேற்படி ஓட்டல் பத்து நிமிடங்களுக்குள் கடந்துவிடக்கூடிய தூரம்தான். ஆனால், அதைக் கடக்க அன்று எங்களுக்கு அரை மணி நேரம் ஆனது.

என்னைத் தேசத்துரோகி என்று அறிவியுங்கள்: பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதம்

ஆசை


இந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு ஓட்டு சுந்தரேசன்

(செப்டம்பர் 2012, தீராநதி இதழில் வெளிவந்த சிறுகதை) 

ஆசை


'நான் இந்த எலக்ஷன்ல நிக்கப்போறன் மாப்புள்ள' என்று குண்டைத் தூக்கிப்போட்டார் சுந்தரேசன் மாமா.
'நெசமாத்தான் சொல்றீங்களா மாமா, இல்ல ஒங்களுக்குக் கிறுக்கு எதுவும் புடிச்சிப்போச்சா?'
'நெசமாத்தான் சொல்றன் மாப்புள்ள. இந்தத் தேர்தல்ல நான் நிக்கப்போறன், சுயேச்சை வேட்பாளரா' என்றார் மாமா.
'அத்தைக்குத் தெரிஞ்சிச்சுன்னா ஒங்கள வுட்டுட்டுத் தேடாதே மாமா. அத வுடுங்க அய்யாவுக்குத் தெரிஞ்சிச்சின்னா என்னல்ல ஒதைக்கப் போறாரு'