எனது ‘அண்டங்காளி’ (2021, டிஸ்கவரி வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கே. குணா திரைப்படத்தின் அபிராமி நினைவாக...
1.
அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான்
கும்பிட முடியும்
காளியவள் களிநடனம்
1.
அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான்
கும்பிட முடியும்
(இன்று அர்ச்சனா வெங்கடேசன் பிறந்தநாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த பேட்டியின் மறுபகிர்வு)
ஆண்டாளையும் நம்மாழ்வாரையும் அழகான ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருப்பவர் அர்ச்சனா வெங்கடேசன். ஏ.கே.ராமானுஜனின் தொடர்ச்சி. நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’ அர்ச்சனாவின் மொழிபெயர்ப்பில் ‘எண்ட்லெஸ் சாங்’ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்புக்காக ‘லூஸியன் ஸ்ட்ரைக் ஏசியன் ட்ரான்ஸ்லேஷன் பிரைஸ்’ என்ற விருது அர்ச்சனாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) மதங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கும் ஒப்பிலக்கியத்துக்குமான இணைப் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனாவுடன் உரையாடியதிலிருந்து…
தமிழ் இலக்கியத்தின் பக்கம் எப்படி வந்தீர்கள்?
சென்னை பெசன்ட் நகரில் பிறந்து வளர்ந்தவள் நான். 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி என்பதால், சென்னையில் இருக்கும் வரை தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், சிறு வயதில் ஆங்கில இலக்கியத்தின் மீது விருப்பம் அதிகம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்லி) ஆங்கில இலக்கியம் படிக்கும்போது, என் அறைத்தோழி ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் வகுப்புக்கு என்னைக் கூப்பிட்டுச் சென்றார்.
(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள். 2018ல் அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை இது)
'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.
மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார்.
ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளையின் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி.
ஆசை
(இன்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மறுபகிர்வு.)
சூரிய கிரகணங்களைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும்
வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சூரிய கிரகணங்கள் அழிவைக் கொண்டுவரும் என்றெல்லாம்
நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம்
மாறாக 1919-ல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அழிவையல்ல, மனித குலத்துக்கு ஒரு மகத்தான ஒரு விஞ்ஞானியைத்தான் அந்த கிரகணம் பரிசாகத் தந்தது.
அவர் வேறு யாருமல்ல, ஐன்ஸ்டைன்தான்.
1905-ம் ஆண்டு ஐன்ஸ்டைன் உருவாக்கிய முக்கியமான கோட்பாடு ‘சிறப்புச் சார்பியல் கோட்பாடு’.
ஆசை
(மர்ரே-ராஜம் நினைவு நாளை முன்னிட்டு மீள்பகிர்வு)
மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் (பிறப்பு: 22-11-1904, இறப்பு: 13-03-1986) தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய சாந்தி சாதனா அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் முடிக்கப்பட்டுக் கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘வார்த்தாமாலை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.
சாந்தி சாதனாவின் தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலாவைச் சந்தித்தபோது ராஜத்தின் நினைவுகளில் மூழ்கினார்.
பகுதி-1
இன்று 'உலக மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. வரலாறு படைத்த பெண்கள், வரலாற்றால் மறைக்கப்பட்ட பெண்கள் போன்றோரை இன்று நினைவுகூர்வது வழக்கம். பெண்ணுரிமை வரலாற்றில் பெண்களின் பங்கை முதன்மையாகச் சொல்ல வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் பெண் முன்னேற்றத்துக்காக ஒரு வகையிலோ பல வகைகளிலோ போராடிய ஆண்களையும் நினைவுகூர்வது அவசியம். இந்திய வரலாற்றில் புத்தரில் தொடங்கி பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலான பல ஆண் தலைவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கு காந்தி ஆற்றிய பணிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தன் தாயார் புத்தலிபாய், மனைவி கஸ்தூர்பாயில் தொடங்கி கடைசியில் காந்தி சுட்டுக்கொல்லப்படும்போது அவருடைய ஊன்றுகோல் போல் கூட நடந்துவந்த மனு, ஆபா போன்றோர் வரை காந்தி வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் ஏராளமானோர். காந்தியைப் போல் பெண்களை ஈர்த்த தலைவர்கள் இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வெகு குறைவு. எனினும், இளமைப் பருவத்தில் காந்தி வழக்கமான இந்திய ஆண் போலவே பெண் குறித்த பார்வையைக் கொண்டிருந்தார். 13 வயதிலேயே காந்திக்குத் திருமணம் செய்யப்படுகிறது. தன் மனைவி கஸ்தூர்பாவை ஒரு போகப் பொருளாகவே காந்தி ஆரம்பத்தில் கருதி வந்திருக்கிறார். காமமும் சந்தேக உணர்ச்சியும் அவரை ஆரம்பத்தில் வாட்டிவதைத்தன.
Simulacrum என்ற கோட்பாடு ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard (உச்சரிப்பு: ஜான் பொத்ரியா) மூலமாகப் பிரபலம் ஆயிற்று.
சிருஷ்டிகரத்துவத்தைப் போலவே எனக்குத் தத்துவமும் முக்கியம். நீட்ஷே, ஜார்ஜ் பத்தாய், ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ என்ற தத்துவவாதிகள் இல்லையேல் என் எழுத்து இல்லை. நானும் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மயங்கிக் கிடந்திருப்பேன். தத்துவம் என்பது எனக்கு உடலும் உயிரும் போல. சிருஷ்டி பாதி, தத்துவம் பாதி. இந்தப் பிரபஞ்சத்தையும் இதில் வாழும் உயிர்களின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள தத்துவம் எனக்குக் கிடைத்த ஒரு ஆதாரமான கருவி. தத்துவம் இல்லையேல் நான் ஒரு வெட்டி எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.
ஆனால் தத்துவத்தின் துணையின்றியே சிருஷ்டிகரத்துவத்தின் உச்சம் தொட்ட போர்ஹேஸ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறக்க மாட்டேன்.
நன்றி: wiki commons, வடிவமைப்பு: கே.சதீஷ் |
இந்தக் கதையில் வரும் மனிதரை நான் சந்தித்தது
23 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்தக் கதையை நான் எழுதியிருந்தால் அந்த அனுபவத்தின்
மீதான, அந்த மனிதரின் மீதான, என் நினைவு மீதான நம்பிக்கை எனக்கு முழுதாக இருந்திருக்கும்.
இப்போது எனக்கு வெறும் குழப்பம் மட்டுமே மிஞ்சுவதால், தெளிவையல்ல குழப்பத்தையே என்
வாசகர்களுக்கு நான் தர விரும்புவதால் இப்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதனை எழுதுவதுதான்
பொருத்தமாக இருக்கும். எந்த அளவுக்கு நீங்கள் என்னை நம்பவில்லையோ அந்த அளவுக்கு எனக்கு
மகிழ்ச்சி.
என்னை அறிந்த பலருக்கும் தெரியும், மன்னார்குடியிலிருந்து சென்னைக்குப் படிக்க
வந்தவன் நான். இங்கே வந்த ஆண்டு 2001. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலம்
முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கல்லூரியில் ஏதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை
என்றாலும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியரைக் கவனிக்காமல், தெளிவாகத் தெரியும் வங்காள
விரிகுடாவை அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். கூடுதலாக,
அருகிலுள்ள விக்டோரியா விடுதியிலிருந்தும் காலையோ மாலையோ கடற்கரைக்கு வந்து சிறிது
உலவலாம், உட்கார்ந்து காற்றுவாங்கலாம். மாநிலக் கல்லூரி, விக்டோரியா விடுதி இரண்டும்
ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்கள் என்பதால் அங்கே நடப்பதெல்லாம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
என்றும் நான் ஷேக்ஸ்பியர் காலத்துப் பார்வையாளன் என்றும் கற்பனை செய்துகொள்வேன்.
அப்படித்தான் ஒருநாள் ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து வெளியேறி விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு மாலையில் கடற்கரை சென்றேன்.
பதவிநீக்கம் செய்யப்பட்டோரின் அறிக்கை மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது |
சரவணன் சுப்பிரமணியன் தனது வலைப்பூவில் எனது ‘கொண்டலாத்தி’ கவிதைத் தொகுப்பு சிறு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும். அதற்கான. கட்டுரைக்கான சுட்டி கீழே:
நிகனோர் பர்ராவுக்கு
ஓவியம்: சல்வதோர் டாலி |
நண்பர்களுக்கு வணக்கம்! எனது கவிதை நூல்களின் சிறப்பு விலைத் திட்டத்துக்கு இன்றே இறுதி நாள். இதுவரை நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆதரவு காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! என்றாலும் இதைத் தாண்டியும் உங்கள் பேராதரவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிக்கொள்வதன் மூலமும், வாங்கிப் பரிசளிப்பதன் மூலமும், இந்த சிறப்பு விலைத் திட்டம் குறித்துப் பிறருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டலாம். இன்றைய தினத்துக்குப் பிறகும் இந்த நூல்களைக் கணிசமான தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி எப்போதும் மேற்கண்ட என் கவிதைத் தொகுப்புகள் மூன்றும் சேர்த்து 35% சிறப்புவிலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு உட்பட). ஆதரவு தாரீர்!
கடந்த ஆண்டு திருவாரூரிலோ தஞ்சையிலோ நடந்த இலக்கிய விழாவில் நண்பர் ஒருவர் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாட்ஸப் செய்தி அனுப்பினேன். அவருக்கு ஏதோ குறுகுறுத்திருக்கும் போலிருக்கிறது, ஏனெனில் அவர் எந்த மெசேஜும் எனக்கு அனுப்பாத, தொடர்பில் இல்லாத நிலையில் போய்விட்டவர், உடனே என்னை அழைத்து “ஆசை நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள்” என்றார். ஓஹோ முடிவெடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்து போனது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் வருந்தவில்லை. நான் அதை மறந்துவிட்டேன்.
இந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா முடிந்தபோது என் ஊர்க்காரர்கள், நண்பர்கள் பலரும் வருத்தப்பட்டார்கள்.
நண்பர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி. இந்த மாதத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பைத் தற்போது எழுதி முடித்திருக்கிறேன். 'யோனிமேட்டின் பாடல்கள்' என்பது இந்தத் தொகுப்பின் தலைப்பு. இத்தலைப்பு பின்னால் மாறலாம்.
காந்தி கவிதைகள் (62 கவிதைகள்), சக்தி - காளி கவிதைகள் (230), தில்லைக் காளி பதிகங்கள் (56), யோனிமேட்டின் பாடல்கள் (53), பிற கவிதைகள் (25+) என்று இந்த மாதம் இதுவரை மட்டும் 425 கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். ஒரே மாதத்தில் நான்கு கவிதைத் தொகுப்புகளுக்கான கவிதைகள் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. தொடர்ந்து ஆதரவும் அன்பும் தெரிவித்து வரும் நண்பர்களுக்கு அன்பும் நன்றி!