Showing posts with label புத்தகக் காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக் காட்சி. Show all posts

Tuesday, December 31, 2024

காந்தி, ராமனை எண்ணுதல், எழுதுதல்: ஆசையின் கவிதைகள் - பேரா. ராஜன் குறை


(எனது புதிய கவிதைத் தொகுப்பான ‘ஹே ராவண்’ நூலுக்குப் பேரா. ராஜன் குறை வழங்கிய அணிந்துரை)

தமிழில் எண்ணிப் பார்ப்பது என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதையும் குறிக்கும்; சிந்தித்துப் பார்ப்பதையும் குறிக்கும். 

       எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 

       கண்ணென்ப வாழும் உயிர்க்கு  

என்பது குறள். இங்கே எண் என்பது ஆங்கிலத்தில் நம்பர் எனப்பட்டாலும், டிஜிட் என்றும் கூறலாம். எண்ணை முதலில் சொல்லி, எழுத்தை அடுத்து சொல்லியிருப்பது மிகவும் கருதத்தக்கது. இப்போது நான் கணினியில் தட்டச்சு செய்வது டிஜிட்டலாகத்தான் எழுத்தாக மாறுகிறது என்பதைக் கருதாமல் இருக்க முடியவில்லை. வள்ளுவருக்கு டிஜிட்டல் யுகம் பற்றிய முன்னறிதல் இருந்தது என்று பொருளல்ல. ஆனால் ‘எண்ணி’ப்  ‘பார்ப்பது’ என்பதில் எண்ணும், கண்ணும் இணைந்திருப்பதும் அதுவே எழுத்தாவதும் தமிழ் சிந்தனை மரபில் பதிவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Saturday, December 28, 2024

சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள்

படம்: கோபி

சென்னை புத்தகக் காட்சியில் எங்கள் மகன் மகிழ் ஆதனின் கவிதை நூல்கள் கிடைக்கும் அரங்குகள் பற்றிய விவரங்கள்  இங்கே:

நூல்வனம் (வானம்) அரங்கு எண்: 438

*நான்தான் உலகத்தை வரைந்தேன்

(கவிதைகள்)

விலை: ரூ.50

எதிர் வெளியீடு அரங்கு எண்: F-43

*காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
(காலத்தைப் பற்றிய கவிதைகள்)

இந்த நூல்கள்  க்ரியா பதிப்பகம் அரங்கு எண் 611-612லும் கிடைக்கும்

இந்தப் புத்தகங்களை வாங்கி குட்டிக் கவிஞனுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!





Friday, December 27, 2024

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள்


சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவரும் மூன்று புதிய நூல்கள் உட்பட இதுவரை 12 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். இவற்றுள் 6 கவிதை நூல்கள் (ஒரு காவியம் உட்பட), மூன்று உரைநடை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் அடங்கும். இவற்றுள் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ அச்சில் இல்லை. இவை தவிர கிட்டத்தட்ட 20 சிறார் நூல்களை Tulika பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். என் நூல்களின் விவரங்களையும் அவை இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகள் விவரங்களையும் இங்கே தருகிறேன்.

எதிர் வெளியீடு அரங்கு எண் F-43

*மாயக்குடமுருட்டி

(காவியம்)

விலை: ரூ.350

*ஹே ராவண்!

(கவிதைகள்)

விலை ரூ.200

*உயரத்தில் ஒரு கழுவன்

(சிறுகதைத் தொகுப்பு)

விலை: ரூ.220

க்ரியா பதிப்பக அரங்கு எண்: 611-612

*கொண்டலாத்தி

(பறவைக் கவிதைகள், வண்ணப் படங்களுடன்)

விலை: ரூ.180

ருபாயியத் -ஒமர் கய்யாம்

(மொழிபெயர்ப்புக் கவிதைகள், பேரா.தங்க.ஜெயராமனுடன் இணைந்து)

விலை: ரூ.125

பறவைகள்: அறிமுகக் கையேடு

(ப.ஜெகநாதனுடன் இணைந்து)

அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்

(பௌத்த மொழிபெயர்ப்பு நூல்)

விலை: ரூ.180

இந்து தமிழ் திசை அரங்கு எண்கள்: 55-56, 668-669

*என்றும் காந்தி

விலை: ரூ.280

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்கள்:  F-4, 75-76

அண்டங்காளி

(கவிதைகள்)

விலை: ரூ.100

குவாண்டம் செல்ஃபி

(கவிதைகள்)

விலை: ரூ.160

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

(கலை, இலக்கியக் கட்டுரைகள்)

விலை: ரூ.330

Tulika - 426

என் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்

Wednesday, June 1, 2016

புத்தாயிரத்தின் கவிஞர்கள்



ஆசை
(சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 01-06-2016 அன்று வெளியான என் கட்டுரையின் விரிவான வடிவம் இது)

புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் என்பது நவீனத் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 90-களுக்கு முன்பு வரை கவிதைகளும் கவிஞர்களும் சமூக வெளி, சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குக் கொடுத்திருந்த இடம் குறைவே. 90-களுக்கு முந்தைய கவிஞர்கள் பெரும்பாலும் மனவெளியில் உலவியவர்களாகவே தெரிந்தார்கள். ஆத்மாநாம் போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்காக இருந்தார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகுக்கு இந்தியா திறந்துவிடப்பட்டது 1990-களின் தொடக்கத்தில். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத் தாரளமயமாதல், உலகமயமாதல் போன்றவற்றின் கரங்கள் இந்தியாவை இறுகப்பற்ற ஆரம்பித்தன. இந்தப் போக்குக்கான எதிர்க்குரல்கள் தமிழ்க் கவிதைகளில் தீவிரமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். கூடவே, தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சார்ந்த குரல்கள் 90-களில் தமிழில் வெளிப்பட ஆரம்பித்தாலும் கவிதையில் ஆழமாகக் காலூன்றியது புத்தாயிரத்துக்குப் பிறகுதான்.

Tuesday, May 24, 2016

வாசகர் திருவிழா 2016: அறிவுலகக் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?


ஆசை
('சென்னை புத்தகக் காட்சி’ தொடங்கவிருப்பதை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 23-05-2016 அன்று வெளியான கட்டுரை)

ஜூன் 1-ல் தொடங்கவிருக்கிறது புத்தகக் காதலர்களுக்கான கொண்டாட்டம் சென்னைப் புத்தகக் காட்சி 2016.
சென்னை பெருமழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த ‘சென்னை புத்தகக் காட்சி’ ரத்தானது. தொடர்ந்து தேர்வுகள், தேர்தல் என்று தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்தப் புத்தகக் காட்சி, ஜூன் 1-ல் நடக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறவிருக்கும் இடம் தீவுத்திடல்.
சுமார் 700 பதிப்பகங்கள், 15 லட்சம் தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை ரூ.15 கோடி விற்பனை இலக்கைக் கொண்டிருக்கிறது.
சென்னை பெருவெள்ளத்தில் புத்தகக் காட்சி தள்ளிப்போனது மட்டும் இழப்பல்ல. 60-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வெள்ளத்தால் ரூ.25 கோடிக்கும் மேல் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ‘தமிழ் மண்’, ‘லியோ புக்ஸ்’, ‘நர்மதா’, ‘இந்து’ போன்ற பதிப்பகங்கள் தலா ஒரு கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்தன. இவை தவிர, சிறு பதிப்பகங்களுக்கும் சிறு விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த வேதனையளிக்கக்கூடியது. அந்தப் பதிப்பாளர்களுக்கெல்லாம் புத்தகக் காட்சிகளையும் வாசகர்களையும்விட அதிக ஆறுதலை யாரால் தர முடியும்? அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.