Friday, April 26, 2024

ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?



நான் இளையராஜா ரசிகனாக (வெறியனாக) மட்டும் இருந்தபோது உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர் அவர் மட்டுமே என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் இருந்தேன். (வேறு யாரையும் கேட்டதில்லை). அந்த எண்ணத்தில் எனக்குள் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டது என் 19 வயதில்.
அப்போது மன்னார்குடி கல்லூரியில் இரண்டு நாள் ரோட்டரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. வீடு மன்னார்குடி என்றாலும் அங்கேயேதான் இரண்டு நாள் இருக்க வேண்டும். அந்த நிகழ்வில் விக்டர் என்ற மூத்த ரொட்டேரியன் தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Monday, April 22, 2024

புத்தக வாரத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பு!

புத்தக வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு அறிவிப்பு. என் கவிதை நூல்களும் குட்டிக் கவிஞன் மகிழ் ஆதனின் கவிதை நூல்களும் 50% சிறப்பு விலையில் கிடைக்கும். இச்சலுகை இன்று தொடங்கி ஏப்ரல் 30 வரை. அனைவரும் வழக்கம்போல் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். விவரங்கள் இப்பதிவில் உள்ள படத்தில்.

Tuesday, April 16, 2024

மகிழ் ஆதன் 12வது பிறந்த நாள்!


மகனும் கவிஞனுமாகிய மகிழ் ஆதனுக்கு இன்று 12வது பிறந்த நாள். மகிழ் ஆதனின் கவிதைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதற்கு முன் சில குறிப்புகள்.

பெற்றோர்களாகிய எங்களின் விருப்பமும் திணிப்பும் இன்றி அவனாகவே 4 வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். நான் கவிஞனாக இருப்பதுதான் அவன் கவிதை எழுதுவதற்குக் காரணம் என்று கூறினால் அது அவனது இயல்பான மேதமையைச் சிறுமைப்படுத்துவதாகும் என்றே கருதுகிறேன். 

மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ வானம் (நூல்வனம்) வெளியீடாக 2021ல் வெளியானது.