Thursday, February 20, 2025

மலேசியா வாசுதேவன் நினைவாக ஒரு கவிதை


இன்று மலேசியா வாசுதேவனின் நினைவு நாள். எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர். எனது ‘குவாண்டம் செல்ஃபி’ கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையை அவரது ‘வா வா வசந்தமே’ என்ற பாடலுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்தப் பாடலில் வரும் ‘தேவமின்னல்’ என்ற சொல்லால் உந்தப்பட்டு எழுதிய கவிதை அது. அந்தக் கவிதை இங்கே:

**
தேவமின்னல்
**
தீய்ந்து கருகிய வானின்
தேவமின்னல் நீ
கீழிருந்தே எழும்
சரமழை நீ
என்ன நினைக்குமந்த
வானம்
இத்தனை கத்திகள்
படையெடுத்து வந்தால்
குறுக்கே பறக்கும்
கொக்கே
வானம் தவிர்த்து
தரை தவிர்த்து
நேரே போய்க் கொத்தி
நுழைகிறாய்
முடிவின்மையில்
-ஆசை
புதுக்கவிதை படத்தில் இடம்பெற்ற ‘வா வா வசந்தமே’ பாடலுக்கு...

No comments:

Post a Comment