Thursday, March 20, 2025

ஊழிமனக் காட்சி

 


காளியவள் களிநடனம்
காட்டி விட்டாள்
ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டி விட்டாள்
ஊழிமனக் காட்சிதனை
நாட்டி விட்டாள்
பாழிருளைப் படம்பிடித்து
மாட்டி விட்டாள்
-ஆசை, ‘அண்டங்காளி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...

No comments:

Post a Comment