Thursday, September 18, 2025

என் பிறந்தநாளில் புதிய புத்தக அறிவிப்பு!



இன்றுடன் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ’கொண்டலாத்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அது முழுக்க முழுக்கப் பறவைகள் பற்றிய கவிதைகள் அடங்கிய முதல் நவீனக் கவிதை தொகுப்பாகும். இன்று அதே நாளில் ஒரு புதிய புத்தகத்தைப் பற்றிய அறிவிப்பையும் அதன் அட்டைப் படத்தையும் வெளியிடுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பு ‘அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது’ என்ற தலைப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நூலை வெளியிடுபவர் ‘உயிர்’ பதிப்பகத்தின் தோழர் சண்முகாநந்தம். நண்பர்கள் இந்த நூலுக்குப் பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்துடன் நூலின் அட்டைப் படத்தை அறிமுகப்படுத்துகிறேன். அட்டை வடிவமைப்பு: கோபு ராசுவேல்

No comments:

Post a Comment