Saturday, March 2, 2024

படிமம் மேலேறியபோது


பல்லி சுவர் மேலே
ஏறக்கண்டு
அதன் வாலைப் பிடித்துக்கொண்டால்
தானும் மேலேறலாம் என்று
இறுதி நொடியில்
பிடித்துக்கொள்கிறான் ஒருவன்
துடித்து அறுந்து
கீழே விழுந்த வாலுடன்
அவனும் துடிக்கிறான்
வாலைத் திரும்பிப் பார்க்காமல்
மேலே போய்விட்ட
பல்லிக்கு
இன்னும் கொஞ்ச நாளில்
இன்னொரு வால்
முளைத்துவிடும்
கீழே துடிக்கும் வாலின்
முன்முனையில்
இன்னொரு பல்லி
ஒருபோதும் முளைக்காது
துடிப்பவனே
-ஆசை

நிகனோர் பர்ராவுக்கு 

No comments:

Post a Comment