Tuesday, February 17, 2015

அறிவோம் நம் மொழியை-1

ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தொடக்க இதழில் 16/09/2013 அன்று வெளியான பத்தி)
வலசைஎன்றால் என்ன?
விலங்குகளும் பறவைகளும் உணவு, நீர் போன்றவற்றைத் தேடியும் தகுந்த தட்பவெப்பத்தைத் தேடியும் இடம்பெயர்வதற்கு வலசை என்று பெயர். இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான்வலசைஎன்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாகவலசைஆகிவிட்டது. மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்கபுலம்பெயர்தல்என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ‘வலசைஎன்ற சொல்லுக்குகுக்கிராமம்என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில்வலசையூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது.

தொடர்புடைய சொற்கள்: வலசை போதல், வலசை வருதல், வலசைப் பறவை, வரத்துப் பறவை (= வலசை வரும் பறவை), விருந்தாளிப் பறவை (= வலசை வரும் பறவை)
                        - 
சாத்தனார்,  நன்றி: தி இந்து (16/09/2013)

No comments:

Post a Comment