ஓவியம்: ராஜே
ஓவியம்: ராஜே
ஆசை
 
ஒரு நாள் காலையில் தையல்சிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தது.  பளிச்சென்ற வானத்தில் ஏதோ கோடுபோல் தெரிந்தது. அது என்ன? 
தையல்சிட்டு உற்றுப் பார்த்தது. அது ஒரு கிழிசல். துணியில் கிழிசல் இருப்பது போல வானத்தில் கிழிசல்.
தையல்சிட்டு பதறிவிட்டது. அய்யய்யோ ஆபத்து வந்துவிட்டதே. வானம் கிழிய ஆரம்பித்திருக்கிறதே. என்ன செய்வது?
தையல்சிட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாரிடமும் சொல்லி எச்சரிக்க வேண்டும் என்று அதற்குத் தோன்றியது.
அவரசமாகப் போய்க்கொண்டிருந்த தேன்சிட்டு ஒன்று, அதன் கண்ணில் பட்டது.